திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், நேற்று "வணக்கம் நெல்லை" 97865 66111 என்ற புதிய வாட்ஸ்-அப் எண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.
பொது மக்கள் இந்த எண்ணில் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் மற்றும் புகார்கள் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மூலம் அந்தந்த துறைக்கு உடனடியாக அனுப்பப்படும். இதற்காக முக்கிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.