Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்டத்தில் வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகள்.

May 25, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் இல்லாத இந்த ஒரு வார ஊரடங்கில் மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுமக்கள் சிரமம் இன்றி தங்கள் வீடுகளில் இருந்தபடியே வாங்கிக் கொள்ளும் வகையில் வாகனங்களில் நடமாடும் கடைகளை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட 535  வாகனங்களின் மூலம் காய்கறிகள் விற்பனை  தொடங்கப்பட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு 80 வாகனங்களும், மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சி பகுதிகளுக்கு 18 வாகனங்களும், மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளுக்கு 115 வாகனங்களும், ஊரக பகுதிகளுக்கு 322 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைப்பதை கண்காணிக்க 9 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify