கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்தவும் மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகரில் உள்ள சுவர்களில் மாவட்ட ஓவியர்கள் நலச்சங்கம் மற்றும் அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ண ஓவியங்கள் வரையும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று திருநெல்வேலி சந்திப்பு, மதுரை சாலையில் உள்ள சுவர்களில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை, திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு.சீனிவாசன் திறந்து வைத்தார். இந்த வண்ண ஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக வரையப்பட்டு சுவர்கள் அனைத்தும் பளிச்சென்று காணப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.