Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகரில் நேற்று பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் கூட்டம்.

May 24, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருவதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பேருந்து சேவைகளும் அனுமதிக்கப்பட்டன. திங்கள்கிழமையான இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்த தயாராக, இந்த இரண்டு நாள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டு கூட்டமாக வந்ததால் மாநகரமே ஸ்தம்பித்தது.

திருநெல்வேலி டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய இடங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டமாக வந்து காய்கறிகள், பழங்கள், பலசரக்குகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதுதவிர வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மாநகரில் திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலை, மேலப்பாளையம் பஜார், பேட்டை பஜார், தச்சநல்லூர் பஜார், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மக்கள் அனைவரும் திரண்டு வந்து பொருட்களை வாங்கியதால், மதியத்திற்குள்ளாக பல இடங்களில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify