Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்!

June 10, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக திரு. விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சிக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஆணையாளாராக ஒரு  ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் கேரளாவை பூர்வீகமாக கொண்ட 2015 ஆம் ஆண்டின் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.

இவர் 2019 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராகவும், துணை ஆட்சியராகவும் பணியாற்றி, பின்னர் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியும் கேரளாவை பூர்விகமாக கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதும், அவர் தற்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராக பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். புதிய மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் விரைவில் பதவியேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify