Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை!

June 2, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துவரும் நிலையில், மாநிலம் முழுவதும் 07/06/2021 தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 55 வார்டுகளிலும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி மண்டல அதிகாரிகள் நேற்று முதல் அனுமதி வழங்கினார்கள்.

இதன்படி ஒவ்வொரு வார்டிற்கும் இரண்டு வாகனங்கள் என 55 வார்டுகளுக்கும் 110 வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை நேற்று காலை முதல் தொடங்கியது. இந்த மளிகை பொருட்கள் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாகனங்களில் வீதி வீதியாக சென்று விற்பனை செய்யப்படும் எனவும் இதனை திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பலசரக்குகள், பழங்கள் ஆகியவற்றை மாநகராட்சி அனுமதி பெற்றுள்ள கடைகள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify