Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்ட வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்!

June 21, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  சீர்மிகு நகரத்திட்டத்தின் நடைபெற்று வரும் கீழ்,  ரூ.78.51 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை, நவீனமயமாக்கும் கட்டுமானப்பணிகளையும், பாளையங்கோட்டையில் ரூ.13.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நவீன பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளையும், ரூ.11.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நேருஜி கலையரங்க கட்டுமானப்பணிகளையும் புதிதாக பதிவியேற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் “சீர்மிகு நகரத்திட்டப் பணிகள்” மற்றும் இதர வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணியின் காரணமாகவும், பாதுகாப்பின் அவசியம் கருதியும், கட்டுமானப்பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.  இருப்பினும், தற்போது கொரோனா நோயின் தாக்கம் வெகுவாகக் குறையத் தொடங்கியுள்ளதால், கட்டமைப்பு பணிகளில் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு, பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அலுவலர்கள், பொறியாளர்கள் முழு கவனம் செலுத்துவார்கள் என ஆய்வுக்கு பின்னர் திரு.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify