திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத்திட்டத்தின் நடைபெற்று வரும் கீழ், ரூ.78.51 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை, நவீனமயமாக்கும் கட்டுமானப்பணிகளையும், பாளையங்கோட்டையில் ரூ.13.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நவீன பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளையும், ரூ.11.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நேருஜி கலையரங்க கட்டுமானப்பணிகளையும் புதிதாக பதிவியேற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் “சீர்மிகு நகரத்திட்டப் பணிகள்” மற்றும் இதர வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணியின் காரணமாகவும், பாதுகாப்பின் அவசியம் கருதியும், கட்டுமானப்பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும், தற்போது கொரோனா நோயின் தாக்கம் வெகுவாகக் குறையத் தொடங்கியுள்ளதால், கட்டமைப்பு பணிகளில் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு, பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அலுவலர்கள், பொறியாளர்கள் முழு கவனம் செலுத்துவார்கள் என ஆய்வுக்கு பின்னர் திரு.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.