Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகர புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றார்!

June 11, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த திரு.மகேஷ்குமார் அவர்களை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்தும், அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையாளராக பணியாற்றிய திரு.சுரேஷ்குமார் அவர்களை திருநெல்வேலி மாநகர புதிய துணை ஆணையாளராக நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவுப்படி நேற்று திருநெல்வேலியின் புதிய காவல்துறை  குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். பதவியேற்றுக்கொண்ட திரு.சுரேஷ்குமார் அவர்கள், திருநெல்வேலி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கும், மாநகரில் நடைபெறும் கொள்ளை, திருட்டு சம்பவங்களை தடுக்கவும், கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify