Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகர புதிய காவல்துறை ஆணையாளராக திரு.செந்தாமரைக்கண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்!

June 5, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை மாநகர காவல்துறைக்கு புதிய ஆணையாளராக திரு.செந்தாமரைக்கண்ணன் அவர்களை நியமித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அமலாக்கப்பிரிவில்  ஐ.ஜியாக பணியில் இருந்த திரு.செந்தாமரைக்கண்ணன் அவர்கள் அந்த பணியில் இருந்து விடுபட்டு, நெல்லை மாநகர புதிய ஆணையாளராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக பதவியேற்றுக்கொண்ட திரு.செந்தாமரை கண்ணன் அவர்கள், கடந்த 1991-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் நெல்லை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், சென்னையில் காவல்துறை துணை ஆணையாளராகவும், சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த சிறப்பு படை அதிகாரியாகவும், விழுப்புரம், திருச்சி, டி.ஐ.ஜி.யாகவும், சிறப்பு காவல் படை ஐ.ஜி.யாகவும், சென்னை அமலாக்கப்பிரிவில்  ஐ.ஜியாகவும்  பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பாளையங்கோட்டை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட பின்னர் திரு. செந்தாமரைக்கண்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாநகரத்தில் ரவுடியிசத்தை ஒடுக்கவும் , கந்துவட்டி பிரச்சனைகளை தடுக்கவும்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா  பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தி மக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் அவர் மாநகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தேவையான இடங்களில் கூடுதல் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify