தமிழக அரசால் தென் மண்டல அளவில் காவல்துறை ஆய்வாளர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட புதிய ஆய்வாளர்கள் பட்டியல்:
1. பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் - காந்திமதி அவர்கள்.
2. தச்சநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர் - வனசுந்தர் அவர்கள்.
3. சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் - கோமதி அவர்கள்.
4. திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் - முத்துலட்சுமி அவர்கள்.
5. பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் - ஹரிஹரன் அவர்கள்.
6. பாளையங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் - முருகன் அவர்கள்.
7. திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் - ஷோபா ஜென்சி அவர்கள்.
8. பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் - ஆக்னஸ் பொன்மணி அவர்கள்.
9. மாநகர தீவிர குற்றப்பிரிவு கண்காணிப்பு ஆய்வாளர் - பிரவீனா அவர்கள்.
10. பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் - சாம்சன் அவர்கள்.
புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்கள் அனைவரும் விரைவில் பதிவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.