Logo of Tirunelveli Today

கரியமாணிக்க பெருமாள் பங்குனி திருவிழா துவக்கம்!

March 28, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி திருவிழா இன்று துவக்கம்.
  • வரும் 06/03/2022 அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில். இங்கு ஒரே இடத்தில் மூலவர் கரியமாணிக்க பெருமாளை நின்ற கோலத்திலும், அனந்த பத்மனாபரை கிடந்த கோலத்திலும், லட்சுமி நாராயணரை அமர்ந்த கோலத்திலும் தரிசிக்கலாம். இத்தகைய சிறப்புகள் பெற்ற இந்த கோவிலின் பங்குனி திருவிழா இன்று (28/03/2022) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதனையொட்டி இன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெற உள்ளது.

இந்த விழாவின் ஐந்தாம் திருநாளான வரும் 01/03/2022 அன்று இரவில் கருட சேவையும், பத்தாம் திருநாளான வரும் 06/03/2022 அன்று காலை தேரோட்டமும் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

கரியமாணிக்க பெருமாள் கோவிலின் வரலாற்றை கீழ்காணும் இணைப்பில் காணலாம். https://www.tirunelveli.today/ta/tirunelveli-nagaram-sri-kariyamanikka-perumal-thirukovil/

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify