Logo of Tirunelveli Today

குழந்தை வரம் அருளும் திருநல்லாறு அஷ்டபுஜ காளியம்மன்

July 20, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தர பெருமாள் கோவில் ஊருக்கு அருகே திருநல்லூரில் அழகான அஷ்டபுஜ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரகாரத்தில் தான் இந்த காளி வீற்றிருக்கின்றாள். நல்லூர் அஷ்டபுஜமாகாளி என்று அழைக்கப்படும் இந்த காளியம்மன் மிகவும் புன்னகை பூத்த முகமாக அனைவருக்கும் அருள் பாவிக்கின்றாள்.

பிரளயத்திலும் அழியாத நாயகியாய் வீற்றிருப்பவள் அஷ்டபுஜ காளியம்மன் என்கின்றது தலபுராணம் .

காளியம்மன் என்றாலே கோர முகமும் ஆவேச தாண்டவமும் நினைவுக்கு வரும் . ஆனால் இந்த காளியம்மன் புன்னகை பூத்த முகத்தவளாய், மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவளாய் , ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் வீற்றிருக்கிறாள்.

மழலைச் செல்வம் இல்லையேல் வாழ்க்கையில் இனிது ஏது! என்று மழலைச் செல்வம் வேண்டி நிற்போர் மனம் குளிரும்படி அருள் பாலிக்கின்றாள் திருநல்லூர் அஷ்ட புஜகாளியம்மன்.

இந்த திருத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் மழலைச் செல்வம் உண்டாகும் என்பதால் ஏராளமான பெண்கள் வந்து இந்த அம்மனை வேண்டி செல்கின்றார்கள்.

அவர்களின் வேண்டுதலின்படி அவள் அருளால் நிறைசூழ கர்ப்பிணியாக இந்தத் திருத்தலத்திற்கு வந்து மாகாளி அம்மன் எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இரு கைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கும் விழா இங்கு நடந்தேறுகிறது.

குழந்தை வரம் என்பது ஒரு பெற்றோரின் வாழ்வின் இனிது காணல். தெய்வத்தின் அருளால் அந்த பாக்கியம் பெற்ற நாம் நல்ல முறையில் வளர்ப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல சிந்தையோடு ,தெய்வ மணத்தோடு கல்வி அறிவோடு, கலைநயத்தோடு , ஈகை குணத்தோடு, உழைக்கும் திறத்தோடு வளர்த்து தன் மகன்(ள்) தரணியில் புகழ் பெறவேண்டும் என்பதில் உறுதி கொள்க .யோசித்து செயலாற்றுக.வெற்றி காண்க. வெற்றியில் நிறைவு பெற்று வாழ்வின் பிறவிப்பயன் பெற்று தெய்வத்தின் அருள் பெற்று மகிழ்ச்சி காணுங்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify