Logo of Tirunelveli Today

குழந்தைகள் நல்ல அறிவாற்றலுடன் வளர்வதற்கான ஆசி வழங்கும் திருக்கடையூர்

July 9, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

ஆடல் அரசனாகிய சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் திருத்தலம் -திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் திருக்கடவூர் எனவும் வில்வராண்ய ஷேத்திரம் எனவும் புகழ் படுகின்ற போற்றப்படுகின்ற ஒரு தலம்.

வில்வராணிய ஷேத்திரம் எனும் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் வில்வ மரத்தின் அடியில்- லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வழிபடுங்கள்.படிப்பில் கவனமின்றி இருக்கும் குழந்தைகளும், ஞான அறிவு பெற்று படிப்பிலே சிறப்பு பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள்.

அதற்கான சிறப்பான தலவரலாற்றை காண்போம் ..

சத்திய லோகத்தில் வாழ்பவன். மும்மூர்த்திகளில் ஒருவனாக திகழ்பவன் .மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உதித்தவன் படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவனுக்கு ஞான உபதேசம் பெற ஆவல் பிறக்கின்றது.

ஞானஉபதேசம் வேண்டி திருக்கடையூருக்கு சென்று இறைவனை வேண்டி தவம் செய்கின்றான். சிவபெருமானும் பிரம்மனின் தவத்தை ஏற்று தம்முடைய சிவஞானத்தை ஒரு வில்வ விதையாக்கி பிரம்மனிடம்.கொடுக்க , பிரம்மனும் திருக்கடையூரில் தாம் தவம் செய்த இடத்தில் அந்த விதையை விதைக்க்கின்றார்

அந்த விதையானது ‌வளர்ந்து பெரிய வில்வ மரம் ஆகின்றது. அந்த வில்வமரத்தின் அடியில் சிவபெருமான் ஒரு லிங்க வடிவில் தோன்றி பிரம்மனுக்கு ஞான உபதேசம் வழங்குகின்ற அற்புதமான காட்சிதனை திருக்கடையூரில் நாம் தரிசனம் காணலாம்.

வில்வ மரத்தின் அடியில் லிங்க வடிவில் காட்சி தந்து ஞான உபதேசம் வழங்கியதால் வில்வராணி ஷேத்திரம் எனும் புண்ணிய ஷேத்திரம் ஆக திருக்கடையூர் ஆலயம் விளங்குகின்றது.

நம்முடைய குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் சிறப்புகள் அனைத்தும் பெற்று, ஞான ஆசியை பெறுவதற்கான அற்புதமான தலமே இந்த அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.

ஆன்மீக சுற்றுலா பயணமாக திருக்கடையூர் சிவபெருமானை சென்று வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து வளம் காணுங்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify