Logo of Tirunelveli Today

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 புதிய ஆம்புலன்ஸ்கள்!

March 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள்.

மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் சேவைக்காக பச்சிளம் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இங்குபேட்டர் வசதிகளுடன் கூடிய 2 ஆம்புலன்ஸ், 3 வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் 17 அடிப்படை வசதிகளுடைய ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உயிர் காக்கும் சேவைகள் அளிக்கப்படுகிறது. தற்போது மேலும் புதிதாக 3 ஆம்புலன்ஸ்கள் வரப்பெற்றுள்ளதால் பொதுமக்கள் தடையின்றி முழுமையாக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவைகளை பயன்படுத்தி கொள்ள முடியும் என்று கூறினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify