Logo of Tirunelveli Today

தூத்துக்குடி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!

February 24, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • தேசிய அளவிலான குடோ போட்டியில் பதக்கங்கள் வென்று தூத்துக்குடி மாணவர்கள் சாதனை.
  • காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த 14.2.2022 முதல் 20.2.2022 ஆம் தேதி வரை இமாச்சலபிரதேச மாநிலம் சோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவர்கள் எமில் சாலமோன், அஜித்குமார் ஆகியோர் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 5 மாணவர்கள் அடுத்து நடைபெற உள்ள சர்வதேச அளவிலான அக்சய்குமார் டிராபி போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்று உள்ளனர்.

இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .ஜெயக்குமார் அவர்கள் அந்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குடோ சங்க தலைவர் இசக்கிராஜா, செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify