- தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டுகளை கைப்பற்றி தி.மு.க அமோக வெற்றி!
- தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் கடந்த 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், மொத்தம் 1,92,964 வாக்குகள் பதிவானது. மாநகராட்சியில் பதிவான இந்த ஓட்டுகள் மாநகரில் உள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைத்து நேற்று எண்ணப்பட்டது. காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்பட்டு வந்தது.
இறுதியாக நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இது தவிர அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தூத்துக்குடியில் தி.மு.க கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
Image source: dailythanthi.com