செய்திக்குறிப்புகள்:
- தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டுகளை கைப்பற்றி தி.மு.க அமோக வெற்றி!
- தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் கடந்த 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், மொத்தம் 1,92,964 வாக்குகள் பதிவானது. மாநகராட்சியில் பதிவான இந்த ஓட்டுகள் மாநகரில் உள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைத்து நேற்று எண்ணப்பட்டது. காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்பட்டு வந்தது.
இறுதியாக நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இது தவிர அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தூத்துக்குடியில் தி.மு.க கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.