செய்திக்குறிப்புகள்:
- திருக்குறுங்குடி நம்பி கோவில் பங்குனி திருவிழா.
- பத்தாம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அமையப்பெற்றுள்ளது அழகிய நம்பிராயர் திருக்கோவில். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இங்கு பெருமாள் நம்பி நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, கிடந்த நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 வடிவங்களில் காட்சித்தருகிறார்.
பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18/03/2022 தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அழகியநம்பிராயர் பெருமாள் தினமும் காலையும், இரவிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து பத்தாம் திருநாளான நேற்று பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது
இதையொட்டி நேற்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் அழகியநம்பிராயர் பெருமாள் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் தேரோட்டத்தை தொடங்கி வைக்க, நான்கு ரத வீதிகளிலும் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.