திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ள காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவின் பன்னிரெண்டாம் திருநாளான நாளை (20/01/2022) இரவு சுவாமி சன்னதி வீதியில் உள்ள சந்திர புஷ்கரணி (வெளித்தெப்பம்) தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நாளை பகல் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி நெல்லையப்பர் , காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தெப்பக்குளக்கரை மீனாட்சி - சொக்கநாதர் கோவில் மண்டகப்படியில் எழுந்தருள சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. பின்னர் மாலை சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய தீபாராதனையும், அதனை தொடர்ந்து இரவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.