Logo of Tirunelveli Today

தமிழக முதல்வர் தலைமையில் தூய்மை மக்கள் இயக்கம் தொடக்கம்

June 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம் :

  • பாளையங்கோட்டை கேடிசி நகரங்களின் தூய்மைகான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.
  • சென்னை மாநகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர்

மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

சிந்தையும் செயலும் ஒன்றாகி சுற்றுப்புறம் தூய்மையாகி ,செய்யும் முயற்சி சிறப்பாகி சென்னை மாநகராட்சி தூய்மை பெற்ற நகரமாய் திகழவேண்டும் என்று அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதையொட்டி திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பாளையங்கோட்டை மண்டலம் கேடிசி நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கத் தொடக்க விழா மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

எம்எல்ஏ மு. அப்துல் வஹாப் தலைமை வகிக்க மேயர் பி எம் சரவணன் துணை மேயர் கே. ஆர். ராஜூ ஆகியோர் முன்னிலை வகிக்க தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சில், நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் நடராஜன், மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிய குடியிருப்பு மக்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தும் துண்டு பிரசுரங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நீர் நிலைகளை சுத்தமாக பராமரிக்கும் முறைகள் பற்றி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று மாநகர பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தூய்மைப் பணி குறித்த உறுதிமொழிகள் எடுக்கப்பபட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி விழா நிறைவடைந்தது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify