Logo of Tirunelveli Today

தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி! வெறிச்சோடிய நெல்லை மாநகரம்!

May 25, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் அமலான இந்த ஊரடங்கின் காரணமாக திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாநகர் முழுவதும் ஆங்காங்கே காவலர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி கவனித்து வந்ததன் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்தது.

மாநகரில் எப்போதும் அதிக நெருக்கடி மிகுந்து காணப்படும் திருநெல்வேலி ரத வீதிகள், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவள்ளுவர் இரட்டை மேம்பாலம், வண்ணாரப்பேட்டை சந்திப்பு, திருவனந்தபுரம் சாலை, மேலப்பாளையம் ரவுண்டானா ஆகிய அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி மாநகர மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தகுந்த காரணம் இல்லாமல் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify