தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆத்திப் என்பவர் நேபாள நாட்டில் நடைபெற்ற யூத் கேம் இண்டர்நேஷனல் சேம்பியன்ஷிப் - 2022 போட்டிகளில், 14 வயதிற்குட்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் சீனியர் பிரிவில் பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனை அடுத்து அந்த மாணவனை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கபீர், செங்கோட்டை குத்துச்சண்டை பயிற்சியாளர் திரு.ஜாகீர் உசேன் பாராட்டி கௌரவித்தார்கள். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன், உடற்கல்வி இயக்குனர் திரு.சஞ்சய்காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.