Logo of Tirunelveli Today

தமிழகத்தில் விவசாய பொருட்களை சந்தைப்படுத்த வேளாண்மை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

May 25, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்., பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் இ வணிக நிறுவனங்கள் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் பொது மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தினசரி விற்பனைக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்துள்ள பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை சந்தைப்படுத்த அல்லது அடுத்த மாவட்டத்திற்கு எடுத்து செல்ல தேவையான அனுமதி பெற அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்கள் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கீழ்கண்ட தொடர்பு எண்களை பயன்படுத்தி தங்கள் பொருட்களை சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டம்:

வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்: 9842788906.

தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்: 9443791079.

தூத்துக்குடி மாவட்டம்:

வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்: 9487523498.

தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்: 9443507232.

தென்காசி மாவட்டம்:

வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்: 7010254484.

தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்: 9442394450.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify