Logo of Tirunelveli Today

தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபத்தில் கதை சொல்லும் நிகழ்ச்சி

September 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 232 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி தமிழ் பண்பாடு மையம் சிறப்பு விழா ஏற்பாடு செய்துள்ளது.
  • தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபத்தில் நெல்லையின் பழமையை பெருமைகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் என பெயரிடப்பட்ட 232 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி தமிழ் பண்பாடு மையம் சிறப்பு விழா ஏற்பாடு செய்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபத்தில் நெல்லையின் பழமையை பெருமைகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .

நெல்லை மாவட்டம் பழமையான தமிழ் கலாச்சாரமும் பெருமைகளையும் கொண்ட ஒரு மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. வெள்ளையர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் தென்பாண்டிய நாடு, திருநெல்வேலி சீமை என்று அழைக்கப்பட்டது .

1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் என்று பெயரிடப்பட்டு புதிய பொலிவுடன் இன்று வரை காட்சி தருகிறது. செப்டம்பர் மாதம் முதல் நாளை நினைவு கூறும் வகையில் நெல்லை தினமாக கொண்டாடுவதற்கு தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் முடிவு எடுத்து இம்மாதம் முழுவதும் அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குறுக்குத்துறை பகுதியில் உள்ள கல் மண்டபத்தில் நேற்று முதல் நாள் பல சிறப்பான நிகழ்ச்சிகள் கோலாகலமாய் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சிக்கு நாட்டுப்புற நடனங்கள் , நெல்லையின் பழமை நாட்டு ஓவியம் தீட்டல், குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி, நெல்லையின் பழமை பெருமைகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு என மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆரோக்கியம், புருஷோத்தமன், வேல சங்கர் ராம் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மேயர் சரவணன் முன்னிலை வகித்தார்.

தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத் துணைத் தலைவர் ரமேஷ் ராஜா, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையப் பொருளாளர் ராமச்சந்திரன், வரலாற்று ஆய்வாளர்கள் செ. திவான் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify