Logo of Tirunelveli Today

அறுபடை 2 ஆம் வீடான திருச்செந்தூரில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

July 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.
  • நேற்று இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியோடு பயணம் மேற்கொண்டனர்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகனின் ஆறு தலங்களில் திருச்செந்தூர் இரண்டாவது தலம் எனும் புகழ்பெற்று தினமும் ஏராளமான பக்தர்களின் வருகை புரிகின்ற இடமாக திகழ்கின்றது. இந்த பழமையான மிக சிறப்பு வாய்ந்த திருக்கோவிலுக்கு பக்தர்கள் வசதியாக‌ சென்று வருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

திருநெல்வேலி கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு புதிதாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 6.20 மணி , 7. 20 மணி , மாலை 6:45 மணி ஆகிய மூன்று நேரங்களிலும் நெல்லை சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாலை 4.05 மணிக்கு சிறப்பு ரயில்கள் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், ‌ இதேபோல் திருச்செந்தூர் - நெல்லைக்கு காலை 10:15 மணிக்கும் மாலை 4:25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டு பயணிகள் இடையே மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்திருந்தது.

நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மாலை 6 .15 மணிக்கு சிறப்பு ரயில்களும் நெல்லை பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் இயக்கப்பட்டது அதேபோல செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு காலை 6:40 மணி மாலை 5. 50 மணிக்கு சிறப்பு ரயில்களும் செங்கோட்டை வழியாக பாலக்காடு நெல்லை எக்ஸ்பிரஸ் செல்லும் இயக்கப்பட்டு வருகிறது

நேற்று முதல் கூடுதலாக நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 9.10 மணிக்கு மதியம் 1:50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது பயணிகள் இடையே மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்திருந்தது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify