விருதுநகர் மாவட்டம்., வத்திராயிருப்பு அருகே அமையப்பெற்றுள்ளது சதுரகிரி சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் திருக்கோவில். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதியில் அமையப்பெற்றிருக்கும் இந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜையில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று தை மாத பௌர்ணமியை ஒட்டி சந்தனமகாலிங்க சுவாமிக்கும், சுந்தரமகாலிங்க சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்ற நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை - வனத்துறை சோதனை சாவடி தாண்டி செல்லவே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்து சதுரகிரிக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் சோதனை சாவடி அருகிலேயே முடி காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு மேற்கொண்டார்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.