திருநெல்வேலி மாவட்டம்., சேரன்மாதேவியை அடுத்துள்ள காருக்குறிச்சி என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது சிவகாமி அம்மை உடனுறை குலசேகரநாத சுவாமி சிவாலயம். உலக மக்கள் கொரோனா நோய் பெருந்தொற்றில் இருந்து விடுபட வேண்டியும், மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும் பிரதோஷ தினமான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுவாமி, அம்பாளுக்கு செண்பகம், மனோரஞ்சிதம் மற்றும் தாமரை மலர்களால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருக்கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் 1008 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர்.