திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் ஓட்டு போட வந்தால், அவர்கள் பயன்படுத்துவதற்காக கவச உடை உள்ளிட்டவை அடங்கிய ‘‘கொரோனா கிட்’’ தயார் நிலையில் வைக்கப்பட்டு, திருநெல்வேலி மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லும் போது வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.