Logo of Tirunelveli Today

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்

June 10, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • ஓம் நமச்சிவாய ' எனும் மந்திரத்தின் ஒலி உணர்கையில்.. மனம் பண்பட்டு படிப்படியாக உயர்நிலை நாம் பெற்று பிறவா நிலை பெற்று- என்றென்றும் தெய்வத்தோடு கலந்த உன்னத நிலை பெறுவதற்கு கோவில் விசேஷங்கள் தரிசனம் காண வேண்டுவது கோடி கோடி புண்ணியம்.
  • அப்படிப்பட்ட புண்ணியத்தை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பினில் காணப் போகின்றோம்.

ஒரு முறை ஸ்வேதகேது மகாராஜா தனது மனைவியோடு தீர்த்த யாத்திரையாக பல ஸ்தலங்களுக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக மனைவி இறந்து விடுகிறார். மனதில் கவலையோடு அவர் ஒவ்வொரு ஸ்தலமாக சென்று சிவபெருமானை வேண்டி கடைசியாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் ஸ்தலத்திற்கு வருகிறார்.

அவருடைய விதி முடிந்து விட்டதால் எமதருமன் ஸ்வேதகேது மன்னனை நெருங்குகிறான் . எமதர்மன் வருவதை கண்டு காலசம்ஹாரமூர்த்தியாய் காட்சி தரும் நெல்லையப்பர் இடத்திலே தஞ்சம் அடைந்து தனக்கு உயிர் பிச்சை வேண்டி சரணாகதி அடைகிறான் மன்னன்.

சுவாமி அவருக்கு மனமிரங்கி மரண பயம் போக்கி அருள் செய்த திருவிளையாடல் நடைபெற்ற தினம் இதுவாகும்

இதையொட்டி நேற்று காலையில் நெல்லையப்பர் கோவிலில் நிறைய பக்தர்கள் வந்திருந்து தரிசனம் காண சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இரவில் சுவாமி அம்பாள், விநாயகர் முருகன் அலங்கார தீபாராதனை, நடந்தது . இரவில் சுவாமி அம்பாள் விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளும் செப்பு தேரில் வீதி உலா வர அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Image source: getlokalapp.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify