Logo of Tirunelveli Today

நெல்லையப்பர் கோவிலில் பயன்தரும் சிறப்பு அன்னதான திட்டம்

July 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையப்பர் கோவிலில் 500 பேருக்கு அன்னதானத் திட்டம் சபாநாயகர் தொடங்கி வைப்பு.
  • நெல்லை 20 கோவில்களில் நடைபெறும் இந்தத் திட்டத்தில் 1100 பேர் பயனடைவர்.

நெல்லை மாவட்டம் அன்னதானத் ஏற்பதிட்டம் மொத்தம் 20 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதனால் 1100 பேர் தினமும் பயனடைந்து வருகிறார்கள் .

நெல்லையப்பர் கோவிலிலும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அன்னதான திட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டு நெல்லையப்பரஈஈஈகாந்திமதி அம்மன் கோவிலில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது .

இப்பொழுது நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனி தேர் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் 500 பேருக்கு என தீர்மானித்து அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது.

பக்தர்களுக்கு உணவு வழங்கி சபாநாயகர் அப்பாவு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாலை ராஜா, லக்ஷ்மணன், இந்து சமய அற நிலையத் துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, ஆய்வாளர் தனலட்சுமி கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் திமுக மாநகராட்சி கோவில் ஊழியர்கள் ஆளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம் வழங்குவது கோவிலில் சிறப்பு என்றாலும், நம்முடைய வாழ்க்கையில் அன்னதானத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திருநெல்வேலி டுடே இங்கு முன்மொழிகின்றது..

தானம் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டால் உடனே நிறைவேற்றுக . மனமுவந்து மகிழ்ச்சியோடு தானம் செய்க.
‌ இடமறிந்து தானம் செய்க. இல்லாதவர்க்கு தானம் செய்க.
‌ புகழ் பாராது தானம் செய்க. புண்ணிய பலன் அனைத்தும் நீர் பெருக.
தானத்தின் மகிமைதனை தம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து கருத்துதனை உணர்ந்து செயல்படுவோம் .

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify