செய்திக்குறிப்புகள்:
தென் மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தென் மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் துவங்கி நடைபெற்றது.
18 வயதுக்கு உட்பட்டவர், 23 வயதுக்குட்பட்டோர், சீனியர், மாஸ்டர் என 4 பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டிகளை ஸ்ரீவைகுண்டம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்களின் மனைவி ஷீபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வருகிற 19/03/2022 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற முடியும் என்பதால் பல வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.