பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத அழகு பைரவராக அன்னை சக்தியோடு சிவசக்தி சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் 64 அவதாரங்களில் முதன்மை வாய்ந்த சக்தி கொண்ட அவதாரமே சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்.
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அற்புத காட்சி தரும் திருத்தலம். குபேரனுக்கும் மகாலட்சுமிக்கும் பொன்னை வாரி வழங்கும் அற்புத சக்தி கொண்டவர் சொர்ணபைரவர் .
ஆனைக்கும் அடி சறுக்கும்- என்பது பழமொழி . வீராதி வீர சம்புவராய மன்னர்- எதிரியிடம் தோற்கும் சூழ்நிலையில் கனவில் சிவன் சொர்ண பைரவராக காட்சி தருகிறார் .
'யாம் வெற்றிக்கு என்றும் துணை இருப்போம்' என உரைக்க- மறுநாள் வெற்றிக்கொடியை நாட்டுகின்றார் மன்னர். மனம் நெகிழ்ந்து மெய்யுருகி கட்டிய திருத்தலமே சொர்ண பைரவர் திருத்தலம் .
வாயில்லா ஜீவன் என்றாலும் நாய் நன்றியுள்ள பிராணி என அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என உணர்த்துவதற்காக தன்னுடைய வாகனமாக நாயை முதலில் கோவிலுக்குள் சென்ற பிறகே பக்தர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர் என்பது இந்த திருத்தலத்தின் சிறப்பு.
பெரும் அழிவிலிருந்து வீரசம்புவரையரை காப்பாற்றியவர் சொர்ண பைரவர் என்பதால் அழிவிடைதாங்கி சொர்ண பைரவர் என போற்றப்படுகிறார்.
சிரித்த முகத்தோடு
இன்புற்று வாழ -நல்ல குடும்பம்,
வாழ்வினில் வழிநடத்த- செல்வம்,
நிலையான வாழ்வு பெற -மன அமைதி,
ஒளிமயமான வாழ்வு வாழ -இசை ஞானம் - அறிவு, நிம்மதியான
உறக்கம் பெற- நோயற்ற வாழ்வு
இவை அனைத்தும் நமக்கு அமைவதற்கு வீட்டில் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள். வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுங்கள்.