Logo of Tirunelveli Today

சொர்ண ஆகர்ஷன பைரவர் திருக்கோவில் அழிவிடைதாங்கி னபைரவபுரம் காஞ்சிபுரம்.

July 6, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத அழகு பைரவராக அன்னை சக்தியோடு சிவசக்தி சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் 64 அவதாரங்களில் முதன்மை வாய்ந்த சக்தி கொண்ட அவதாரமே சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்.

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அற்புத காட்சி தரும் திருத்தலம். குபேரனுக்கும் மகாலட்சுமிக்கும் பொன்னை வாரி வழங்கும் அற்புத சக்தி கொண்டவர் சொர்ணபைரவர் .

ஆனைக்கும் அடி சறுக்கும்- என்பது பழமொழி ‌ . வீராதி வீர சம்புவராய மன்னர்- எதிரியிடம் தோற்கும் சூழ்நிலையில் கனவில் சிவன் சொர்ண பைரவராக காட்சி தருகிறார் .

'யாம் வெற்றிக்கு என்றும் துணை இருப்போம்' என உரைக்க- மறுநாள் வெற்றிக்கொடியை நாட்டுகின்றார் மன்னர். மனம் நெகிழ்ந்து மெய்யுருகி கட்டிய திருத்தலமே சொர்ண பைரவர் திருத்தலம் .

வாயில்லா ஜீவன் என்றாலும் நாய் நன்றியுள்ள பிராணி என அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என உணர்த்துவதற்காக தன்னுடைய வாகனமாக நாயை முதலில் கோவிலுக்குள் சென்ற பிறகே பக்தர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர் என்பது இந்த திருத்தலத்தின் சிறப்பு.

பெரும் அழிவிலிருந்து வீரசம்புவரையரை காப்பாற்றியவர் சொர்ண பைரவர் என்பதால் அழிவிடைதாங்கி சொர்ண பைரவர் என போற்றப்படுகிறார்.

சிரித்த முகத்தோடு
இன்புற்று வாழ -நல்ல குடும்பம்,
வாழ்வினில் வழிநடத்த- செல்வம்,
நிலையான வாழ்வு பெற -மன அமைதி,
ஒளிமயமான வாழ்வு வாழ -இசை ஞானம் - அறிவு, நிம்மதியான
உறக்கம் பெற- நோயற்ற வாழ்வு

இவை அனைத்தும் நமக்கு அமைவதற்கு வீட்டில் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள். வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுங்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify