Logo of Tirunelveli Today

ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் விரைவில் முடிக்க கோரி வியாபாரிகள் கொடுத்த மனுவை ஏற்றுக்கொண்டார் ஆணையர்.

May 26, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்தி குறிப்புகள்:

  • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்கூட்டத்தில் ஆணையரிடம் மக்கள் மனுஅளிப்பு.
  • மாற்றுத்திறனாளிடம் ஆணையர் எழுந்து சென்று மனுவைப் பெற்றுக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் லெனின், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, ராமசாமி ,நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் திரு.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ‌ பெற்றுக்கொண்டார்.

தச்சநல்லூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மகாராஜன் தவழ்ந்தபடி வந்து மனு கொடுத்தார். உடனே ஆணையாளர் விஷ்ணுசந்திரன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று கோரிக்கை மனுவை பெற்றது பார்ப்போர் நெஞ்சை நெகிழ வைத்தது.

"இரண்டு கால்களும் இல்லாத தமக்கு வாய் பேச முடியாத மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்க முடியாது சிரமப்படுவதாகவும், அரசு பெட்டிக்கடை வைத்து தர வேண்டும்" என்று மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஆய்வு செய்த ஆணையாளர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

உதயம் வெங்கடேஸ்வரா குடியிருப்போர், வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழி சாலை உடையார்பட்டி பகுதியில் சாலை பணிகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

தச்சநல்லூர் மண்டலம் பாலபாக்யா பகுதி மக்கள் சார்பில் தெரு விளக்கு மற்றும் வீட்டு எண், குடிநீர், சாலை வசதி சீரமைப்பு நடவடிக்கை விரைவில் செய்ய கோரி மனு அளித்திருந்தனர்.

நெல்லை சந்திப்பு எஸ் என் ஈரோடு வியாபார சங்கத்தினர் கொடுத்த மனுவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவில் முடித்து சாலை அமைக்க வேண்டும் என மனு அளித்தனர்.

நெல்லை மாநகர் சந்திப்பு பகுதி வியாபாரிகள் கொடுத்த மனுவில் பஸ் செல்வதற்கான சாலை சீரமைப்பு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

நெல்லை மாநகர சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் டவுன் பகுதியில் நிரந்தரமான இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் கடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நிறைவாக அனைவருடைய மனுக்களும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify