Logo of Tirunelveli Today

சிவகாசி நகர்ப்புற பகுதிகளில் நாளை மின்தடை

January 20, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

சிவகாசி நகர்ப்புறத்துக்கு மின்விநியோகம் வழங்கும் பாறைப்பட்டி, நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (21/01/2022 - வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், சிவகாசி பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரத வீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், கண்ணாநகர், அம்மன் நகர், காமராஜபுரம், ஐம்பத்தாறு வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify