Logo of Tirunelveli Today

சிவகாசி மாநகராட்சியின் முதல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

February 23, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • சிவகாசி மாநகராட்சி அந்தஸ்துடன் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ளது.
  • பெரும்பாலான இடங்களில் ஆளும்கட்சி வெற்றி.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல், ஆகிய 2 நகராட்சிகளையும் இணைத்து சிவகாசி மாநகராட்சியாக மாற்றி தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து மொத்தம் 48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சி, மாநகராட்சி அந்தஸ்துடன் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலை கடந்த 19/02/2022 அன்று சந்தித்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் மாலை அறிவிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி 48 வார்டுகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் விவரங்கள்:

தி.மு.க - 24
அ.தி.மு.க -11
காங்கிரஸ் - 6
ம.தி.மு.க -1
வி.சி.க - 1
பா.ஜ.க - 1
சுயேச்சை - 4

Image Source: Official site of Sivakasi Municipal Corporation

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify