Logo of Tirunelveli Today

சிறு குறு தொழில் வளர்ச்சி குறித்த கல்லூரி கருத்தரங்கம்

June 13, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்தி சுருக்கம் :

  • சனிக்கிழமை நடைபெற்ற களக்காடு அருகே கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியல் கல்லூரியில் சிறு குறு தொழில்கள் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்.
  • கருத்தரங்கை பேரவை தலைவர் மு . அப்பாவு தொடங்கி வைத்தார். எம் எல் ஏ .ரூபி . ஆர் மனோகரன் வரவேற்றார்.

நடப்பு செய்திதனை தெரிந்து கொள்வதற்கு முன்பு அதில் இருக்கும் விஷயங்களுக்கும் விளக்கம் கொடுப்பதில் திருநெல்வேலி டுடே என்றும் முன்னிலை வகிக்கின்றது.

கருத்தரங்கம் என்றால் என்ன!

ஒரு குழுவாக அழகாய் இணைந்து செயல்படுவது கருத்தரங்கம். அனைவருடைய கருத்துக்களையும் அனுகூலமாய் ஏற்று , மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்தளித்து பேசும்போது ஏற்படக்கூடிய பலன்களை கருத்தரங்கில் நாம் பெறலாம்.

வாழ்வில் முன்னேற்றத்திற்கான பல வழிகளை கருத்தரங்கின் மூலம் பெற முடியும் என்பதை மையமாக வைத்து செயல்படுவதால் கருத்தரங்கம் என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இதை மையமாக வைத்து சனிக்கிழமை அன்று களக்காடு அருகே கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியல் கல்லூரியில் சிறு குறு தொழில்கள் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை பேரவை தலைவர் மு . அப்பாவு தொடங்கி வைத்தார். எம் எல் ஏ .ரூபி . ஆர் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி தாளாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து கருத்தரங்கில் மகளிருக்கான சிறு குறு தொழில் தொடங்குவதற்கான, வளர்ச்சிக்கான பல ஆலோசனைகள் பற்றி பேசினார். மகளிர் குழுவினருக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify