Logo of Tirunelveli Today

வள்ளியூரில் சிட்கோ தொழிற்பேட்டை விரைவில் தொடக்கம்

August 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சிட்கோதொழிற்பேட்டை விரைவில் தொடங்கப்படும் என்று த.மோ அன்பரசன் தகவல்.
  • நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரூ 52.72 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள் கட்டுவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 52.72 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தலா ரூபாய் 10 .46 லட்சம் மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டப்படும் . மத்திய அரசின் மூலம்1. 50 லட்சம் மற்றும் மாநில அரசின் மூலம் 7 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் சார்பில் ரூபாய் 1.96 லட்சம் பங்களிப்பு செய்கின்ற நிலையில் இந்த திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியின் வடக்கு பக்கத்தில் உள்ள இடம், வீடுகள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது‌.

சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் தா.மு. அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டனர். பிறகு வள்ளியூரில் அமைந்துள்ள சிட்காட் தொழிற்பேட்டை மற்றும் டான்சி இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்பொழுது அமைச்சர் தா. மு. அன்பரசன் கூறியதாவது;
.
சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பது பற்றிய செயலாக்கம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது‌ , அதன்படி இந்த திட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட உள்ளது.

பணகுடி நகர பஞ்சாயத்து பகுதிகளில் ரூபாய் 49 . 14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்த இருக்கின்றது. வள்ளியூர் டான்சிமில் 3.6; ஏக்கர் இடத்தில் மூன்று கட்டிடங்கள் இருக்கின்றன.

அதில் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வள்ளியூரில் 100 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட இருக்கிறது. படித்த இளைஞர்கள் பயன் தரக்கூடிய தொழிற்பயிற்சி மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்றும் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்‌.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify