Logo of Tirunelveli Today

நெல்லை தபால் நிலையங்களில் தேசியக்கொடி தட்டுப்பாடு

August 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாவட்டம் தபால் நிலையங்களில் தேசியக்கொடிகள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.
  • தேசியக்கொடி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடைகளில் அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தபால் நிலையங்களில் தேசியக்கொடி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதனால் மக்கள் பொதுமக்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து தேசியக் கொடிகள் வாங்கும் சூழ்நிலை உள்ளது

இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. 75 ஆவது இந்திய சுதந்திர தினம் என்பதால் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இடைத்தொடர்ந்து தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்கவும் அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு கொடியின் விலை 25 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தபால் நிலையத்தில் தேசியக்கொடிகள் வாங்கிச் சென்றனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தபால் நிலையத்தில் ஓரிரண்டு நாட்களில் அனைத்து கொடிகளும் விற்று விட்டன. தபால் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக கிடைக்கவில்லை . அதனால் தேசியக்கொடி கிடைக்காது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இந்த வருடம் தேசிய கொடிகள் மிகவும் குறைந்த அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. மக்கள் அனைவரும் அதிக அளவில் வாங்கிச் சென்றுள்ளனர். குறைந்த அளவு தேசியக்கொடிதான் இருக்கின்றது . அதனால் இனி பொது மக்களுக்கு தேசிய கொடிகள் விற்பனை செய்வது சாத்தியம் இல்லை . பொதுமக்கள் பலர் தினமும் தபால் நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வருத்தம் அளிக்கிறது ' என்று தபால் துறையில் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மக்களுக்கு உள்ள ஆர்வத்தின் காரணமாக 75 ஆண்டு சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட அனைவரும் விரும்புகின்றனர் அதனால் கடைகளில் அதிக அளவில் விலை கொடுத்து தேசியக்கொடி வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify