Logo of Tirunelveli Today

நெல்லை 46 குளங்களுக்கு தனி கால்வாய் கோரிக்கை

September 3, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 46 குளங்களுக்கு தனிக் கால்வாய் அமைத்து தர சௌமியா எட்வின் கோரிக்கை.
  • 46 குளங்களுக்கும் தண்ணீர் போக்குவரத்து அதிகமானால் சுமார் 75 ஆயிரம் விவசாயி குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 46 குளங்களுக்கு தனிக் கால்வாய் அமைத்து தர அமைச்சர் துரை முருகனிடம் நான்குநேரி யூனியன் தலைவர் சௌமியா எட்வின் கோரிக்கை மனு அளித்தார்

திருநெல்வேலி இட்டமொழி நெல்லை மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிகளுக்காக தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வந்திருந்தார் . அப்பொழுது நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌமியா எட்வின் சார்பில் அவரது கணவர் நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலரும் திமுக ஒன்றிய செயலாளருமான எஸ். ஆரோக்ய எட்வின் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது;

நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 46 குளங்களுக்கு தனி கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும் தண்ணீர குறைவின்றி இருந்தாலும் அந்த குளங்களுக்கு தனி கால்வாய் இல்லாததால், வருடம் முழுவதும் வறண்டு போய் விடுகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 46 குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகமானால் சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள் . அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும் . நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்ற நாள் முதலாக நான் அரசின் சார்பாக 46 குளங்களுக்கு தண்ணீர் வசதி ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றேன்.

ஆதலால் விவசாயிகளின் நலனுக்காக 46 குளங்களுக்கு தனி கால்வாய் அமைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் .

விரைவில் ஆய்வு செய்து திட்டத்தை செயல்படுத்துவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார் .

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்
1 2 3 20

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify