Logo of Tirunelveli Today

விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு மார்ச்-23ல் தேர்வு!

March 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு.
  • பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 23/03/2022 அன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள், மாணவிகள் விளையாட்டுகளில் சாதனை புரிய அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கிட, சத்தான உணவுகள் மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பயிற்சி பள்ளிகள் அரசு சார்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி, திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் மாணவிகளுக்கான செயல்பட்டு வருகிறது.

இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாணவ - மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை பெறுவதற்கான தேர்வு வரும் 23/03/2022 ஆம் தேதியன்று காலை 8.00 மணிக்கு துவங்கி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 0462-2572632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Image source: Facebook.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify