Logo of Tirunelveli Today

சீர்மிகு நகர திட்டம் - சிறப்பான பணிகளில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு மூன்றாவது இடம்!

June 26, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

இந்தியா முழுவதும் தற்போது சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி) சுமார் நூறு நகரங்களில் சிறப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயமுத்தூர், வேலூர், ஈரோடு, தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் சீர்மிகு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாநகரை பொறுத்த வரையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி டவுன் மார்க்கெட்  ஆகியவற்றில் புதிய கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகள், பொருட்காட்சி திடலில் புதிதாக வர்த்தக மையம் அமைக்கும் பணிகள் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிகளை மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டுவசதி துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.  இதில் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக பணிகளை மேற்கொண்ட நகரங்களில் டேராடூன் மாநகராட்சிக்கு முதல் இடமும், சாகர் மாநகராட்சிக்கு இரண்டாவது இடமும், திருநெல்வேலி மாநகராட்சிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify