Logo of Tirunelveli Today

ஸ்காட் கலை அரங்கில் 2 நாட்கள் தமிழ் பேரவை ஆண்டு விழா

June 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம்

  • நெல்லை சேரன்மாதேவி பேரவை ஐம்பத்தி ஒன்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது
  • ஆண்டுவிழாவில் தமிழ் பேரவை தலைவர் செந்தில் நாயகம் தலைமை ஏற்று உரையாற்றினார்

விழுந்து எழும் மழலை இனிதாக துவண்டு விழும் உடல் எழுந்தாக, கவலை கொண்ட முகம் சிரிப்பாக குழப்பம் கொண்ட மனம் தெளிவாக ஆவதற்கு தேனினும் இனிய தமிழ்மொழியில் பேசினால் போதும் புத்துணர்ச்சி தானாக பிறக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக..

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஸ்காட் கலை அரங்கில் 2 நாட்கள் சேரன்மாதேவி தமிழ் பேரவை 59 வது ஆண்டு விழா நடந்தது. தமிழ் பேரவை தலைவர் செந்தில் நாயகம் தலைமை தாங்க பேரூராட்சி தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.

தமிழ் பேரவை துணைத் தலைவர் ராமன் வரவேற்பு உரையாற்ற, தாசில்தார் பாலசுப்பிரமணியன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை பேசினர். செல்லப்பா குழுவினரின் தேவார பண்ணிசையும், சங்கர சரஸ்வதி வித்யாலயா குழுவினரின் குரலிசை மற்றும் நாதலய நாட்டியமும் நடைபெற்றது .

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல்களில் பெரிதும் விஞ்சி நிற்பது சமய உணர்வா! சமுதாய உணர்வு? என்ற தலைப்பில் பட்டிமன்றம் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு பார்க்க மிக சிறப்பாக நடைபெற்றது .

கமிட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் நன்றி கூறினார் . இரண்டாவது நாள் நடந்த விழாவிற்கு தமிழ் பேரவை தலைவர் துரைசாமி தலைமை தாங்க பொருளாளர் பொன்னழகன் வரவேற்றுப் பேசினார் . இசக்கி சுப்பையா எம்எல்ஏ உதவிப் பேராசிரியர் ஆகியோர் வாழ்த்தி பேசினர் .

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் 'என பாடினார் பாரதியார். அவருடைய கவிதை வரிகள் அனைத்தும் மக்களுக்கு எழுச்சியூட்டும் விழிப்புணர்வு கொண்ட பாடலாக அமைந்தது. அப்படிப்பட்ட தமிழுக்கு தொண்டாற்றிய பாரதியாரின் பாடல்கள்
வெங்கடேஸ்வரன் குழுவினரின் இசையில் மிக அருமையாக பாடினர்.

தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற தமிழ் பேரவையின் மதிப்பு தலைவர் செந்தில் நாயகத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது .தமிழ் பேரவை துணை செயலாளர் சாய்ராம் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify