செய்திக் குறிப்புகள் :
- நெல்லை களக்காடு ஸ்ரீ கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா
- வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
ஸ்ரீ கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
கொலு மண்டபத்திற்கு சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு மிக அழகாய் காட்சி தருகின்றாள். கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது .
பத்து நாட்கள் நடைபெறும் இந்த தெய்வீக விழாவில் தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வர…. திரளான பக்தர்களுக்கு காணக் கிடைக்காத அற்புததரிசனம் ஆக அமையும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
திருவிழா குறித்த விவரங்கள்;
8ஆம் நாள் 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளல்
9 ஆம் திருநாள் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்
10ஆம் திருநாள் 12 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி
ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.