Logo of Tirunelveli Today

சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா

June 11, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா வந்ததன் விளைவாக திருநெல்வேலி களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 3ஆம் தேதி கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனமாய் காட்சி தந்து அருள் பாலித்தார்.

8ஆம் திருநாளான நேற்று காலையில் கும்பாபிஷேகம் மதியம் அன்னதானம் என விழாவில் தொடர்ந்து நடராஜர் பச்சை பட்டுஉடுத்தி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

பின்னர் கோவிலுக்கு வந்த நடராஜருக்கு தீபாராதனை நடைபெற்று இரவில் பிச்சாண்டவர் கோலத்தில் கங்காளநாதராய் எழுந்தருளினார் .

பின்னர் சந்திரசேகர் சாமிகளும் சத்தியவாகீஸ்வரர் பூங்கோவில் வாகனத்தில் , அம்பாள் கிளி வாகனத்தில் என வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி தந்தனர்

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மனிதர்கள் நாடார் சமுதாயத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .9ஆம் திருநாளான இன்று சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்க ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify