Logo of Tirunelveli Today

சமுதாய நலன் காக்கும் காவல்துறை முப்படை விண்ணப்ப பயிற்சி முகாம்

June 6, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம் :

  • திருநெல்வேலி களக்காட்டில் காவல்துறை முப்படைகளில் சேர விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • பயிற்சி முகாமில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று தொடங்கி வைத்தார்

காவல்துறை முப்படைகளில் விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி முகாம் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி களக்காட்டில் காவல்துறை முப்படைகளில் சேர விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவும் தொடங்கிவைத்தார்.

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஏற்பாட்டில் களக்காடு ஜோசப் கல்வியியல் கல்லூரியில் காவல்துறை மற்றும் முப்படை பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது

சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார் . அப்போது அவர் கூறுகையில் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது‌ அதனுடன் சேர்ந்து நாமும் வளர அரசியல் தலைவர்கள் வழிகாட்டவேண்டும்.

கடந்த 1996ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி பதவி ஏற்ற பொழுது தகவல் தொழில்நுட்பம் கணினியில் பொதுமக்களுக்கு புரிதல் இல்லாமல் இருந்தது.

தகவல் தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் டைடல் பார்க்கை தொடங்கினார்.

தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதற்கும் துறைகளில் பல லட்சம் பேர் வேலை பார்ப்பதற்கும் காரணமாக இருந்தவர் கருணாநிதி ஆவார் என்றார்.

களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் உள்பட பலர் கலந்து கொண்டனர் .ஏற்பாடுகளை ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர் .

சுற்றுப்புற சூழல் தின விழா

நெல்லை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சுற்றுச்சூழல் தின விழா நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு

கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு பசுமை முதன்மை விருதுகளை வழங்கினார். மேலும் அவர் பேசியதாவது

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்

அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமாய் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. நெல்லை மாவட்டத்தை பெருமைப்படுத்தும் விதமாக தூய பொருநை
அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்

இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பசுமை முதன்மையாளர் விருதை மாநில அளவில் 100 பேருக்கு வழங்கியுள்ளார் ..

நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி தண்ணீரை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது மரங்கள் நடும் பழக்கத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் நாம் சுவாசிக்கும் காற்றும் பருகும் குடிநீர் சுத்தமாக கிடைப்பதற்கும் முக்கிய பங்களிக்கின்றது எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அரசு முதன்மை விருது ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்

நெல்லை மாவட்டத்திற்கு இந்த விருது 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வளகாப்பு மையம் மதிவாணன் மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னையா டாக்டர் திருமகள் ஆகிய மூவருக்கும் விருதுகளையும் ஒரு லட்சத்திற்கான காசோலையும் சபாநாயகர் வழங்கினார்.

ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு நீர் வளம் பற்றிய கருத்துரை பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷபம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு மையம் சுயம்பு தங்கராணி மாவட்ட அரசு வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மகளிர் திட்ட அலுவலர் சாந்தி உதவி சுற்றுப்புறச் சூழல் பொறியாளர் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify