Logo of Tirunelveli Today

சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆவரைகுளத்தில் இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

May 28, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்து குறிப்புகள்:

  • ஆவரைகுளம் அதை சுற்றியுள்ள மின்சார வாரிய சம்பந்த பணிகள் ஆவரைகுளத்திற்கே மாற்றம். ஆவரைக் குளம் மின் பயனீட்டாளர்கள் மகிழ்ச்சி.
  • வள்ளியூர் யூனியன் ஆவரைக்குளம், சிதம்பராபுரம், யாக்கோபுரம், வடக்கன்குளம், அடங்கார்குளம், பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் இதனால் பயன் பெறுவர்

நேரம் மிச்சமாகி , காரியம் எளிதாகி பல வேலைகள் பூர்த்தியாகி, நிம்மதி பெருமூச்சு விடுதலில் ஒரு சுகம் உண்டு என்பதை இப்போதுதான் ஆவரை குளம் சுற்றியுள்ள மின் பயனீட்டாளர்கள் அனுபவிக்க போகின்றனர். அதற்கான பதிவுதனை காண்போம்..

வள்ளியூர் யூனியன் ஆவரைக்குளம், சிதம்பராபுரம், யாக்கோபுரம், வடக்கன்குளம், அடங்கார்குளம், பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள், குமரி மாவட்டம் குமாரபுரத்தில் அமைந்த இளநிலை உதவி மின்பொறியாளர் அலுவலகம் சென்று மின்வாரியம் தொடர்பான பணிகளை செய்து வந்தனர்.

இதனால் மிகவும் சிரமமாக இருந்து வந்து சூழ்நிலையில் சபாநாயகர் அப்பாவு, ஞான திரவியம் எம்பி ஆகியோரிடம், ஆவரைகுளத்தில் மின்வாரியம் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கான முயற்சி மேற்பட்டு வந்த நிலையில் ஆவரைகுளத்தில் புதிதாக இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட்டது.

ஞான திரவியம் எம்பி தலைமையில், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் முன்னிலை வகிக்க ஆவரைகுளத்தில் இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். வள்ளியூர் மின்வாரியர் கோட்ட செயற் பொறியாளர் வானரசு வரவேற்று பேசினார்.

விழாவில் யூனியன் கவுன்சிலர் மகாலட்சுமி பஞ்சாயத்து தலைவர்கள் ஆவரைக் குளம் அழகு பாஸ்கர் அடங்கார்குளம் வசந்தா, சிதம்பரபுரம் யாக்கோபுரம் டாலின் ஜான்சி, வடக்கன்குளம் ஜான் கென்னடி உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Image source: Dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify