Logo of Tirunelveli Today

சபாநாயகர் அடிக்கல் நாட்ட வள்ளியூரில் ரூ 12. 13 கோடி புதிய பஸ் நிலையம்

June 24, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக் குறிப்புகள்

  • திருநெல்வேலி வள்ளியூரில் 12.13 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட ஏற்பாடு.
  • புதிய பஸ் நிலையத்திற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பு

நெல்லை மாவட்டம் அரசு கவனம் ஏற்று பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அப்படி வளர்ந்து வரும் ஊர்களில் வள்ளியூர் நகர பஞ்சாயத்தும் ஒன்று.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.13 கோடி
வள்ளியூர் பஸ் நிலையத்தை நவீன மயமாக்க புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்க, அடிக்கல் நாட்டு விழா நேற்று வள்ளியூர் பஸ் நிலையம் கீழ்பகுதியில் நடந்தது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ். ஆர். ஜெகதீஷ் , நகர பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகிக்க, வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்‌.

சபாநாயகர் அப்பாவு புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைதது அவர் பேசியதாவது ..

வணிக வளாகம் , கட்டண கழிப்பதை இலவச கழிப்பதை , தாய்மார்களுக்கு வசதி போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும்.

271 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் திருக்குறுங்குடி, ஏர்வாடி, வள்ளியூர், பணகுடி ஆகிய
பஞ்சாயத்து மக்கள் பயன்பெறும் வகையில மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் …

பஸ் நிலையத்தில் கடைவைத்திருகும் 47 வியாபாரிகளுக்கு குடவோலை முறையில் ஒதுக்கீடு , வள்ளியூரில் விரைவில் அரசு கலைக்கல்லூரி, வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் கேசவநேரி சந்திப்பில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை, அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகள் ….என அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்‌ என்று அப்பாவு தெரிவித்தார்

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கண்ணன் , ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக தலைவர் ஜோசப் பெல்சி , சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர்
டேனியல் , நகர இளைஞரணி அமைப்பாளர் தில்லை ராஜா. திமுக பிரமுகர் நம்பி மற்றும் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா நன்றி கூறினார்

Image source: Dailythanthi.com

செய்தி ஆசிரியர்

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify