Logo of Tirunelveli Today

விருதுநகரில் பாமாயில் விலை கடும் உயர்வு!

March 7, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

விருதுநகர் சந்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி காரணமாக பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றய நிலவரப்படி விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.440 உயர்ந்து ரூ. 2600 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆகவும் விற்பனையான நிலையில் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகர் சந்தையில் விற்பனையான மற்ற பொருட்களின் விலை நிலவரம்:

உளுந்து 100 கிலோ மூடை ரூ.8100 -.9300 வரையிலும்,
உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.10100 - 11100 வரையிலும்,
தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.7300 -.9800 வரையிலும்.
பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11500 - 11900 வரையிலும்,
பாசிப்பயறு 100 கிலோ மூடை ரூ.8000 - 8500 வரையிலும்,
துவரை 100 கிலோ மூடை ரூ.6400 - 7700 வரையிலும்,
துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.10700 - 11600 வரையிலும்,
மல்லி லைன் ரகம் 40 கிலோ மூடை ரூ.5300 -.6200 வரையிலும்,
மல்லி நாடுரகம் 40 கிலோ மூடை ரூ.3400 - 3500 வரை வரையிலும்,
முண்டு வத்தல் மூடை ரூ.27000 - ௨௮௦௦௦ வரையிலும்,
ஏ.சி. வத்தல் மூடை ரூ.16000 - 18000 வரையிலும்,
புது வத்தல் மூடை ரூ.7000 -10500 வரையிலும்,
நிலக்கடலை பருப்பு 80 கிலோ மூடை ரூ.7000 ஆகவும்.
கடலை புண்ணாக்கு 100 கிலோ மூடை ரூ. 4900 ஆகவும்,
எள்ளு புண்ணாக்கு 50 கிலோ மூடை ரூ.2 ஆயிரம் ஆகவும்,
சீனி 100 கிலோ மூடை ரூ.3820 ஆகவும் விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify