Logo of Tirunelveli Today

தூய தமிழ் பாற்றாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

July 11, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறவியல் அகரமுதலி திட்ட இயக்குனர் கே விஜயராகவன்‌ தூய தமிழ் பாற்றாளர் விருதுகள் பற்றி அறிவிப்பு.
  • மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ் பற்றாளர் விருது. பெற விரும்புவோர் ஜூலை 31தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நெல்லை மாவட்டம் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறவியல் அகரமுதலி திட்ட இயக்கங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. இதுகுறித்து அதன் இயக்குனர் கே விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு .

மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்படும் . அந்த விருதை பெற விரும்புவோர் ஜூலை 31தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அன்றாட நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழிலேயே பேசுகின்ற தகுதி வாய்ந்தவர்களை மாவட்டத்திற்கு ஒருவர் என தேர்ந்தெடுத்து தூய தமிழ் பற்றாளர் விருது மற்றும் தலா 20,000 பரிசுத்தொகை சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுவதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது ‌

சொற்குவை டாட் காம் (sotkuvai.com) வலைதளத்தில் இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செய்யவும். அதில் கேட்கப்படுவதை நிரப்பி, ஜூலை 31ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது செந்தமிழ் சொற்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் நகர் நிர்வாக அலுவலக வளாகம் , முதல் தளம் _ எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை MRC நகர் சென்னை - 600028 என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.

விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் அறிஞர்கள் அல்லது பேராசிரியர்கள் அரசு அலுவலர்கள் போன்றவர் இடத்தில் தம் தனி தமிழ் பற்றினை உறுதி செய்த நற்சான்றிதழ் பெற்று உங்கள் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். ஒரு பக்க அளவிலான தன் விவரக் குறிப்புகளையும் புகைப்படத்துடன் இணைக்க பட்டிருக்க வேண்டும். தற்போது வாழும் மாவட்டத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்

கடைசி நாள் நிறைவடைந்த பின்னர் விண்ணப்பித்தோரின் தமிழ் பற்றை ஆராய்கின்ற வகையில் எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பு என்று கைப்பேசி மூலமாக நேர்காணல் நடத்தப்படும் .

உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறவியல் அகரமுதலி திட்ட இயக்குனர் கே விஜயராகவன்‌ தம்முடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஆழ்ந்த அனுபவம் கொண்டு நடைமுறை வழக்கத்தில் தூய தமிழில் பேசும் சான்றோர்களுக்கு இந்த அறிவிப்பை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருநெல்வேலி டுடே தன்னுடைய வாழ்த்தை தெரிவிக்கின்றது.

Image source: linkedin.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify